×

சென்னையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை: வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.2.50 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த மார்ச் முதல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரத்தில் அதிரடியாக உயர்வதும் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 6ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,460க்கும், சவரன் ரூ.43,680க்கும் விற்பனையானது. கடந்த 7ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ.5,457-க்கு விற்பனையானது. 8ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,495க்கும், சவரன் ரூ.43,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை 10 தேதி சவரனுக்கு ரூ.304 உயர்ந்த நிலையில் 10ம் தேதி அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,485-க்கும், சவரன் ரூ.43,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 11ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,856-க்கு விற்பனையானது. நேற்று அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனையானது. இந்நிலையில் 2வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்குவாளோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,537-க்கும் –சவரன் ரூ.44,296-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2.50 அதிகரித்து ரூ.79.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை: வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.2.50 உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...